'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்கிறார் ஷங்கர். ஆனால் இந்த தகவலை அவர் வெளியிட்ட போது அந்நியன் படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன, அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியிருப்பதாக தெரிவித்தவர், அந்நியன் ரீமேக் செய்யும் உரிமை ஷங்கருக்கு இல்லை என ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
அதையடுத்து டைரக்டர் ஷங்கர், அந்நியன் படத்திற்கு சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படக்கதையின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்று தனது சார்பில் ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சினையை தற்போது தான் உறுப்பினராக இருக்கும், செளத் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்க்கு கொண்டு சென்றுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதையடுத்து ஷங்கருக்கு இதுகுறித்த விளக்கம் கேட்டு கடிதம் எழுத முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.