நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்கிறார் ஷங்கர். ஆனால் இந்த தகவலை அவர் வெளியிட்ட போது அந்நியன் படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன, அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியிருப்பதாக தெரிவித்தவர், அந்நியன் ரீமேக் செய்யும் உரிமை ஷங்கருக்கு இல்லை என ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
அதையடுத்து டைரக்டர் ஷங்கர், அந்நியன் படத்திற்கு சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படக்கதையின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்று தனது சார்பில் ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சினையை தற்போது தான் உறுப்பினராக இருக்கும், செளத் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்க்கு கொண்டு சென்றுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதையடுத்து ஷங்கருக்கு இதுகுறித்த விளக்கம் கேட்டு கடிதம் எழுத முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.