மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்கிறார் ஷங்கர். ஆனால் இந்த தகவலை அவர் வெளியிட்ட போது அந்நியன் படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன, அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியிருப்பதாக தெரிவித்தவர், அந்நியன் ரீமேக் செய்யும் உரிமை ஷங்கருக்கு இல்லை என ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
அதையடுத்து டைரக்டர் ஷங்கர், அந்நியன் படத்திற்கு சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படக்கதையின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்று தனது சார்பில் ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சினையை தற்போது தான் உறுப்பினராக இருக்கும், செளத் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்க்கு கொண்டு சென்றுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதையடுத்து ஷங்கருக்கு இதுகுறித்த விளக்கம் கேட்டு கடிதம் எழுத முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.