நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. தமிழில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி. சமீபத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 3 மாத சிறை வாசத்திற்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சஞ்சனா கல்ராணிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தயவு செய்து யாரும் கொரோனாவை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.