ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரோனா பரவலின் அடுத்த கட்ட தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் தியேட்டர்களையும் இரவு நேர ஊரடங்கு சிக்கலில் தள்ளியுள்ளது. அதன் காரணமாக இரவுக் காட்சிகளை நடத்த முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தலைவி, எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களை தள்ளி வைத்துவிட்டார்கள். இதனிடையே, இரவுக் காட்சிகள் இல்லை, ஞாயிறு காட்சிகள் இல்லை என்பது தங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
தற்போது அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள். தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம்.