நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கொரோனா பரவலின் அடுத்த கட்ட தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் தியேட்டர்களையும் இரவு நேர ஊரடங்கு சிக்கலில் தள்ளியுள்ளது. அதன் காரணமாக இரவுக் காட்சிகளை நடத்த முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தலைவி, எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களை தள்ளி வைத்துவிட்டார்கள். இதனிடையே, இரவுக் காட்சிகள் இல்லை, ஞாயிறு காட்சிகள் இல்லை என்பது தங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
தற்போது அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள். தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம்.