கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
கொரானோவின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் இரண்டாவது நாளிலிருந்து அந்த கட்டுப்பாட்டில்தான் திரையிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் படம் வியாபார ரீதியாக லாபத்தைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி 'எம்ஜிஆர் மகன்', மே 13ம் தேதி 'டாக்டர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விரைவில் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அந்தக் காட்டுப்பாடுகளில் தியேட்டர்களுக்கான கட்டுப்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். ஒருவேளை வார இறுதி நாட்களில் தியேட்டர்களை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டால் மேலே சொன்ன புதிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த தினங்களில் தியேட்டர்கள் இல்லையென்றால் புதிய படங்களை வெளியிட்டு வசூலைப் பெறுவது கடினம். கொரானோ பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை மேலும் சில படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.