பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

சின்னக்கலைவாணர் என எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று(ஏப்., 17) காலமானார். அவருக்கு திரையுலகினரும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காலம் என்பதையும் தாண்டி பலர் அவருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிஊர்வலத்தின் போது வழிநெடுக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை இன்று(ஏப்., 18) சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில், ‛‛எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி. அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி. இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.