தமிழ் ரசிகர்களைக் கவரும் மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | கல்வி விழா : விஜய்யின் இரண்டு புதிய திட்டம் | புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா | தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது |
கொரானோவின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் இரண்டாவது நாளிலிருந்து அந்த கட்டுப்பாட்டில்தான் திரையிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் படம் வியாபார ரீதியாக லாபத்தைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி 'எம்ஜிஆர் மகன்', மே 13ம் தேதி 'டாக்டர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விரைவில் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அந்தக் காட்டுப்பாடுகளில் தியேட்டர்களுக்கான கட்டுப்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். ஒருவேளை வார இறுதி நாட்களில் தியேட்டர்களை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டால் மேலே சொன்ன புதிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த தினங்களில் தியேட்டர்கள் இல்லையென்றால் புதிய படங்களை வெளியிட்டு வசூலைப் பெறுவது கடினம். கொரானோ பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை மேலும் சில படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.