சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கொரானோவின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் இரண்டாவது நாளிலிருந்து அந்த கட்டுப்பாட்டில்தான் திரையிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் படம் வியாபார ரீதியாக லாபத்தைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி 'எம்ஜிஆர் மகன்', மே 13ம் தேதி 'டாக்டர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விரைவில் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அந்தக் காட்டுப்பாடுகளில் தியேட்டர்களுக்கான கட்டுப்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். ஒருவேளை வார இறுதி நாட்களில் தியேட்டர்களை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டால் மேலே சொன்ன புதிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த தினங்களில் தியேட்டர்கள் இல்லையென்றால் புதிய படங்களை வெளியிட்டு வசூலைப் பெறுவது கடினம். கொரானோ பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை மேலும் சில படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.