தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து 2019ல் வெளியான ‛ஒத்த செருப்பு' படத்திற்கு சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கும் பார்த்திபன் அவரே நடிக்கவும் செய்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இப்படத்திற்கு இசையமைப்பதை ரஹ்மான் கூறினார். அந்த காணாளியை தனது டுவிட்டரில் பகிர்ந்து, ‛‛எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது. ஆமாம், இரவின் நிழலுக்கு ரஹ்மான் இசையமைப்பது பெருமை. இதுவரை அருமையான 3 பாடல்களை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார் பார்த்திபன்.




