'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை முழுமையாக மூடச் சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. 'தலைவி' படத்தை ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் தற்போது ஏப்ரல் 23ம் தேதி மகாராஷ்டிராவில் வெளியிட முடியாது.
தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியிட்டு ஹிந்தி வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்வார்களா என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ராணா டகுபட்டி நடித்த 'காடன்' படத்தையும் தமிழ், தெலுங்கில் வெளியிட்டு, ஹிந்தியில் தள்ளி வைத்துவிட்டனர்.
ஒரு வேளை 'தலைவி' படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்தால் தமிழ், தெலுங்கில் ஏப்ரல் 23ம் தேதி வெளியாவது சந்தேகம்தான்.