பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை முழுமையாக மூடச் சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. 'தலைவி' படத்தை ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் தற்போது ஏப்ரல் 23ம் தேதி மகாராஷ்டிராவில் வெளியிட முடியாது.
தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியிட்டு ஹிந்தி வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்வார்களா என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ராணா டகுபட்டி நடித்த 'காடன்' படத்தையும் தமிழ், தெலுங்கில் வெளியிட்டு, ஹிந்தியில் தள்ளி வைத்துவிட்டனர்.
ஒரு வேளை 'தலைவி' படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்தால் தமிழ், தெலுங்கில் ஏப்ரல் 23ம் தேதி வெளியாவது சந்தேகம்தான்.