ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனாவின் அடுத்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அது போல அறிவிப்பு வரலாம் என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களிடம் வந்துள்ளது.
தமிழில் நேற்று வெளியான 'சுல்தான்' படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. அங்கும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அடுத்த வாரம் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் வெளியாக உள்ளது. ஆனால், மக்களிடையே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் லாக்டவுன் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் டென்ஷன் ஆகியுள்ளனர்.
மேலும், 'கர்ணன்' படத்தை தென்னிந்திய மாநிலங்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருவேளை 50 சதவீத இருக்கைகள் என்றால் அது படத்தின் வசூலை பாதிக்கலாம். அதோடு அதற்கடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாத நிலையும் ஏற்படலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் டென்ஷன் போக வேண்டுமென்றால் லாக்டவுன் வராமல் இருக்க வேண்டும். இருந்தாலும் அதைப் பற்றி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.