ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்ற பட்டியலில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகியவைதான் இடம் பெறும். மற்ற மொழித் திரைப்படங்களில் அவற்றை விட குறைவான சம்பளமே கிடைக்கும்.
தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களில் 'பாகுபலி' படம் வரும் வரையில் ஷங்கர் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இயக்குனர் ராஜமவுலி ஷங்கரை முந்திவிட்டார்.
ராஜமவுலிக்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம். 'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம் என தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது. ஷங்கர் அடுத்து இயக்கும் தெலுங்குப் படத்திற்கும் அதே சம்பளம் பேசியிருக்கலாம், அல்லது கூடுதலாக 5 கோடி வரை பேசியிருக்கலாம் என்கிறார்கள்.
நடிகர்களில் கூட 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் மற்ற தென்னிந்திய நடிகர்களை மிஞ்சிவிட்டார். அவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம், சில பல உரிமைகள் தரப்படுகின்றன.