லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
தமிழ்த் திரையுலகம் கடந்த ஒரு வருட காலமாக கொரானோ தொற்று பாதிப்பால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் சரியான வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து ஓடிடி தளத்திற்காக 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா தொழிலளார்களுக்கு உதவி செய்ய அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலளார்களுக்கு இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மாதத்திற்கு 1500 ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் சுமார் அந்த சங்கத்தைச் சேர்ந்த 700 உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
அவர்களின் உதவிக்கு சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் நன்றி தெரிவித்துள்ளார்.