ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகம் கடந்த ஒரு வருட காலமாக கொரானோ தொற்று பாதிப்பால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் சரியான வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து ஓடிடி தளத்திற்காக 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா தொழிலளார்களுக்கு உதவி செய்ய அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலளார்களுக்கு இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மாதத்திற்கு 1500 ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் சுமார் அந்த சங்கத்தைச் சேர்ந்த 700 உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
அவர்களின் உதவிக்கு சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் நன்றி தெரிவித்துள்ளார்.