நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் தனி ஆல்பங்கள் இதற்கு முன் பெரிதாக வெற்றி பெறவில்லை. பலரும் ஆல்பம் வெளியிட்டு அது தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஹிந்தியில் வாரத்திற்கு ஒரு ஆல்பம் வெளிவந்தது. தற்போது தமிழிலும் தனி இசை ஆல்பங்கள் வெளிவருது அதிகரித்து வருவதோடு பெரிய அளவில் தனி வியாபாரமாக மாறி உள்ளது.
சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ பாடிய என்ஜாயி எஞ்சாமி உலக அளவில் டிரண்டிங் ஆகியிருக்கிறது. யுவன் வெளியிட்ட டாப்பு டக்கரு ஆல்பமும் ஹிட்டானது. இதனால் தனி இசை ஆல்பம் வெளியிடுவது அதிகரித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது தருண் குமார் அஸ்கு மாரோ என்ற இசை ஆல்பத்திற்கு இசை அமைத்து, பாடி, நடித்தும் உள்ளார். அவருடன் கவின், தேஜஸ்வி ஆகியோரும் ஆடியுள்ளனர். சிவாங்கியும் உடன் பாடி ஆடியும் இருக்கிறார். கு.கார்த்திக் பாடலை எழுதி உள்ளார். டோங்லி ஜூம்போ இயக்கி உள்ளார். தி ரூட் நாய்ஸ் அண்ட் க்ரைன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.