ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் கடந்த நான்கு மாதங்களில் வெளியான 50க்கும் மேற்பட்ட படங்களில் ஓடிய ஒரே படம் 'மாஸ்டர்'. அப்படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் பழையபடி திரண்டு வந்தனர்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த பல படங்கள் சில நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. மக்கள் இன்னமும் தியேட்டர்கள் பக்கம் வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரானோ தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதனால், மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் 'காட்சிங்ல்லா Vs காங்' படத்திற்கு ஓரளவிற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த பெரிய படமாக அடுத்த வாரம் கார்த்தி, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'சுல்தான்' படம் வெளிவர உள்ளது. படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப் போகிறோம் என ஏற்கெனவே அதன் தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.
இந்தப் படத்தை தியேட்டர்காரர்களும் அதிகமாக நம்பியுள்ளனர். திரையுலகில் விசாரித்த போது படமும் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படம் ஒரு மாற்றத்தைக் கொடுத்ததைப் போல 'சுல்தான்' படமும் கொடுக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.