ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் கடந்த நான்கு மாதங்களில் வெளியான 50க்கும் மேற்பட்ட படங்களில் ஓடிய ஒரே படம் 'மாஸ்டர்'. அப்படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் பழையபடி திரண்டு வந்தனர்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த பல படங்கள் சில நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. மக்கள் இன்னமும் தியேட்டர்கள் பக்கம் வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரானோ தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதனால், மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் 'காட்சிங்ல்லா Vs காங்' படத்திற்கு ஓரளவிற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த பெரிய படமாக அடுத்த வாரம் கார்த்தி, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'சுல்தான்' படம் வெளிவர உள்ளது. படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப் போகிறோம் என ஏற்கெனவே அதன் தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.
இந்தப் படத்தை தியேட்டர்காரர்களும் அதிகமாக நம்பியுள்ளனர். திரையுலகில் விசாரித்த போது படமும் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படம் ஒரு மாற்றத்தைக் கொடுத்ததைப் போல 'சுல்தான்' படமும் கொடுக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




