மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கங்கனா பற்றி பேசிய பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், “இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவை அழைத்தபோது, ஜெயலலிதா மாதிரி நடிக்க நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.. நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா.. கங்கனாவும் அதே போன்றவர் தான். தற்போது தேசிய விருதை வென்றுள்ளார். தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.” என கூறினார்
இந்தபடத்திற்கும் விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார். ஏற்கனவே கங்கனா இந்தியில் நடித்து இயக்கிய மணிகர்ணிகா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியும் உள்ளார். அந்த நட்பின் அடிப்படையில், விஜயேந்திர பிரசாத் தான் இந்தப் படத்திற்குள் கங்கனாவை அழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..