‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாவகரத்து செய்து விட்டார். தற்போது பிரபல சர்வதேச பேட்மிட்டன் வீராங்கணை ஜூவாலா கட்டாவை தீவிரமாக காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். அதோடு ஜூவாலா கட்டாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆர்வமாக இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை. ஜூவாலா கட்டாவுடன் இருப்பது காதல் அல்ல, பரஸ்பர மரியாதைதான். எனது நலனின் அவரும், அவர் நலனில் நானும் அக்கறையுடன் இருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பேன். அவர் விளையாடுவார். அவரது பேட்மிட்டன் அகாடமியை தொடர்ந்து நடத்துவார்.
ஜூவாலா கட்டா தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறியிருக்கிறார். அதில் அவர் சந்தித்த சவால்கள், அவமானங்கள், விமர்சனங்கள் அனைத்தையும் சொன்னார். அதில் ஒரு சினிமாவுக்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நான் திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். இதற்கு நிறைய பணம் வேண்டும் உங்களிடம் இருக்கிறதா என்று அவர் கேட்டார். அந்த பணத்தை நான் சம்பாதித்து விட்டு தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். இப்போது எனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறேன். இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க இருக்கிறேன். என்றார்.