ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2005ல் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதையடுத்து, சந்திரமுகி 2வில் சிம்ரன், ஜோதிகா, கியாரா அத்வானி போன்ற நடிகைகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானபோது அதற்கு மறுப்பு தெரிவித்தார் லாரன்ஸ். இந்நிலையில் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வரும் அவர், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மே மாதம் முதல் சந்திரமுகி-2 படத்தில் நடிக்க தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சந்திரமுகி படத்தில் மனோதத்துவ டாக்டர் வேடத்தில் வேட்டையன் பங்களாவிற்குள் செல்வார் ரஜினி. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அதே பங்களாவிற்குள் ஒரு புதிய குடும்பம் செல்வதும் அதன்பிறகு வேட்டையன் என்ட்ரி கொடுப்பது போன்றும் கதை பண்ணப்பட்டுள்ளதாம். அந்த வகையில் சந்திரமுகி-2 படம் முழுக்க வேட்டையனாகவே நடிக்கிறாராம் லாரன்ஸ்.