'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சண்டைக்கோழி 2 மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த அப்பாணி சரத், ஜீ தமிழில் வெளியான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது ஆரி நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரும் சிகாமணி மற்றும் சகலகலாசலா போன்ற திரைப்படங்களை இயக்கியவருமான வினோத் குருவாயூர் இயக்குகிறார். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டி மீடியா தயாரிக்கிறது.
படம் குறித்து இயக்குனர் வினோத் குருவாயூர் கூறியதாவது: தமிழ்நாடு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் எனும் எனது கனவு தற்போது நிறைவேறி உள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. அது குறித்து நன்கு ஆராய்ந்து இந்த படத்தை உருவாக்குகிறோம் படப்பிடிப்பு மே 15 அன்று தொடங்குகிறது. என்றார்.