பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு |

கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க விபிஎப் நிறுவனங்கள் வருகிற மார்ச் 31ந் தேதி வரை சலுகை கட்டணத்தை அறிவித்தது. அது தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு தற்போது பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது.
விபிஎப் கட்டணம் மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளது.