என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் டாப்ஸி. தற்போது தமிழில் இரண்டு படங்கள், ஹிந்தியில் நான்கு படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் தற்போது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி அதில் குடியேறி உள்ளார். புதிய வீட்டில் தரையில் உட்கார்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, “வீடு - நண்பர்களை சந்திக்கும் இடம், குடும்பம் கூடவும், அன்பை வளர்க்கும் இடம். புது வீட்டிற்குள் குடிபுகும் நிகழ்வு, மகிழ்ச்சியான வீடு, மகிழ்ச்சியான தரை,” எனக் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
டாப்ஸியின் புதிய வீட்டிற்கு அவரது சினிமா நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
மும்பையில் உள்ள ஒவ்வொரு சினிமா பிரபலத்திற்கும் சொந்தமாக வீடு வாங்குவதென்பது பெரும் கனவு. அதிலும் சில பிரபலமான பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் தனி வீடு கூட கிடைக்காது, அடுக்குமாடி குடியிருப்புகள்தான் கிடைக்கும். தென்னிந்தியாவில் உள்ள சில பிரபலங்கள் கூட தற்போது மும்பையில் வீடு வாங்கும் ஆவலில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் டாப்ஸி வீட்டில் வருமான வரி நடைபெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.