மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
உடன் ஜோடியாக நடித்தவர்களுடன் நடிகர், நடிகையர் காதலில் விழுவது திரைத்துறையில் ஒன்றும் புதிதில்லை. ஆனால் ஒரு சிலர் வெளிப்படையாகக் காதலை ஒப்புக்கொள்வார்கள். ஒரு சிலர் வதந்திகளுக்கு கருத்து தெரிவிக்காமல் திருமணத்தின் போது தான் வாயைத் திறப்பார்கள். மேலும் சிலரோ இது போன்ற வதந்திகளுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்ப மாட்டார்கள். ஆனாலும் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடியின் பெயர் காதல் கிசுகிசுக்களில் சிக்கி விடும்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறது ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி. தமிழில் மிருகம் படத்தில் நாயகனாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தெலுங்கில் பிசியான நடிகராக வலம்வரும் இவர், பாட்னர், கிளாப், குட் லக் ஷகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவரும் நிக்கி கல்ராணியும் சேர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஆதியின் பிறந்தநாளுக்கு நிக்கி கல்ராணி சென்றது, அடுத்தடுத்து இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, பின் இருவரும் தனியாக சுற்றுலா செல்ல விமான நிலையம் சென்றது என இவர்களது பெயர் காதல் கிசுகிசுக்களில் சிக்கியது. ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட போதும், இருவரும் ஆம் என்றோ இல்லை என்றோ மறுக்காமல் மௌனம் காத்தது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்தது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் சிவுடு படத்தில் தான் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருக்கிறார். நடிகர் ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.