ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மும்பை: பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி பன்னு, ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் ஆகியோருக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில், கதாநாயகியாக நடிப்பவர் டாப்சி பன்னு, 33. பாலிவுட் சினிமாவின் பரபரப்பான இயக்குனர் என பெயர் பெற்றவர், அனுராக் காஷ்யப், 48.
இவர், 2011ல், பேன்டம் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி, பல்வேறு ஹிந்திப் படங்களை தயாரித்தும், இயக்கியும் வந்தார். இந்த நிறுவனத்தில், பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான விக்ரமாதித்ய மோத்வானே, தயாரிப்பாளர்கள் விகாஸ் பாஹல், மது மான்டேனா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
இந்த, பேன்டம் பிலிம்ஸ் நிறுவனம், கடந்த, 2018ல் மூடப்பட்டது. அதில் இருந்த அனைவரும் தனித்தனி தயாரிப்பு நிறுவனங்களை துவங்கினர். இந்நிலையில், பேன்டம் பிலிம்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி பன்னு, ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மஹாராஹ்டிராவின் மும்பை மற்றும் புனேவில், இவர்களுக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சோதனை நடைபெற்றது. மேலும், மும்பையைச் சேர்ந்த, க்வான் என்ற திறமை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் சிலருக்கு சொந்தமான இடங்களிலும், சோதனை நடைபெற்றது. அனுராக் காஷ்யபின் முன்னாள் பங்குதாரரான மது மான்டேனா, இந்த க்வான் நிறுவனத்தை துவக்கினார் என்பதால், சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்சி பன்னு ஆகியோர், விவசாயிகள் போராட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உட்பட, பல்வேறு விவகாரங்களில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.