22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், தந்தையின் பாதையில் நடிப்பு பக்கம் திரும்பிவிட, அவரது மகள் விஸ்மாயாவோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.. ஆனால் தற்போது அவருக்குள் ஒளிந்து கொண்டுள்ள ஒரு எழுத்தாளரை, தான் எழுதி வெளியிட்டுள்ள, 'கிரையன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்' என்கிற புத்தகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்-14ல் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த புத்தகத்தை வெளியிட்ட விஸ்மாயா, தன்னுடைய தந்தையின் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் தனது நட்பு வட்டாரத்திற்கும் இந்த புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைத்தார். அதில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர். இந்தப்புத்தகத்தை படித்துவிட்டு விஸ்மாயாவின் இலக்கிய திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமிதாப்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ரொம்பவே வியக்கும் நடிகர் மோகன்லால், தனது மகள் விஸ்மாயா எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளார். ரொம்பவே நுட்பமான, உணர்வுப்பூர்வமான பாடல்கள் மற்றும் ஓவியங்களின் பயணமாக இருக்கிறது இந்த படைப்பு... திறமை என்பது பரம்பரரை குணம்” என பாராட்டியுள்ளார். இவர் தவிர, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோரும் விஸ்மாயாவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.