இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

கொரோனா ஊரடங்கு முடிந்து 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். சில பெரிய படங்கள் தியேட்டருக்கு வந்தாலும் பல படங்கள் ஓடிடி தளத்திற்கு செல்கின்றன.
இதற்கிடையில் விபிஎப் நிறுவனங்கள் அறிவித்துள்ள கட்டண சலுகை வருகிற மார்ச் 31ந் தேதியுடன் முடிகிறது. விபிஎப் கட்டணத்தை கட்ட மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் என்பதில் தியேட்டர் உறுதியுடன் இருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் பல சுற்று பேச்சு நடத்தியும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வருகிற மார்ச் 1ந் தேதி முதல் தியேட்டர்களை மூட தியேட்டர் அதிபர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு விரைவில் கூட இருக்கிறது.ூ.