25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ள மலையாள படம் சால்மன். 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது.
இப்படத்தில் விஜய் யேசுதாஸ் ஜோடியாக ஜொனிடா நடித்துள்ளார். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது . ஸ்ரீஜித் இசை அமைத்துள்ளார், ராகுல் மற்றும் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஷலீல் கல்லூர் கூறியதாவது: சால்மன் என்பது ஒருவகை கடல் மீன். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் அனைத்து தடைகளையும் சூழல்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலிலேயே பயணிக்கிறது. அதுபோலவே இப்படத்தின் கதை வாழ்வின் கறுப்பு பக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை இப்படம் பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது. என்றார்.