பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலம் இது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஆப் தமிழா ஆதி, உள்ளிட்ட சிலர் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் பாலாஜி விது தற்போது ஹீரோவாகியிருக்கிறார்.
இவர் தமிழில் இன்பா, சூரன், மஸ்து மஜா மாடி(கன்னடம்) உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து தமிழில் வெளியான த்ரிஷா இல்லைனா நயன்தாரா கன்னடா ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தற்போது கதையின் நாயகனாக தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.
இதுகுறித்து பாலாஜி விது கூறியதாவது: நான் நடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார். கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன். திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. என்றார்.