7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் சுமார் எட்டு மாத காலம் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வரவில்லை. அதையெல்லாம் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவரும் போது மாற்றும் என்று நம்பினார்கள், அதன்படியே நடந்தது. கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்தது. அதற்கடுத்து சிம்பு, நிதி அகர்வால் நடித்த 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதி வெளிவந்தது.
இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். 'மாஸ்டர்' படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து படம் பெரிய வசூலையும் பெற்றது. ஆனால், 'ஈஸ்வரன்' படத்திற்கு அப்படியே குறைந்து போனது. எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.
இருந்தாலும் இரண்டு படங்களும் தற்போது 25வது நாளைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளிவந்த பின்னும் கடந்த பத்து நாட்களாக தியேட்டர்களில் ஓடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இரண்டு படங்கள் இந்த ஆண்டில் 25வது நாளைக் கடந்துள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.