‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் சுமார் எட்டு மாத காலம் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வரவில்லை. அதையெல்லாம் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவரும் போது மாற்றும் என்று நம்பினார்கள், அதன்படியே நடந்தது. கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்தது. அதற்கடுத்து சிம்பு, நிதி அகர்வால் நடித்த 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதி வெளிவந்தது.
இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். 'மாஸ்டர்' படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து படம் பெரிய வசூலையும் பெற்றது. ஆனால், 'ஈஸ்வரன்' படத்திற்கு அப்படியே குறைந்து போனது. எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.
இருந்தாலும் இரண்டு படங்களும் தற்போது 25வது நாளைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளிவந்த பின்னும் கடந்த பத்து நாட்களாக தியேட்டர்களில் ஓடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இரண்டு படங்கள் இந்த ஆண்டில் 25வது நாளைக் கடந்துள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.