சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து படிப்படியாக வளர்ந்து தன்னையும் ஒரு முன்னணி காமெடியனாக சினிமாவில் நிறுத்திக்கொண்ட சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நீண்டகாலமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்த இளையராஜா சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றை திறந்துள்ளார். அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் ஒலிப்பதிவையும் தொடங்கினார் இளையராஜா. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தனது டுவிட்டரில் இளையராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள சூரி, ஐயா இசையின் ராஜா இளையராஜா, வெற்றிமாறன் அண்ணன் மற்றும் மாமா விஜய் சேதுபதி உடன் இன்று(நேற்று) எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது. இது என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சூரி.
இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அவர் கூறியதாவது: சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது பெரிய சந்தோஷம். வெற்றிமாறனோடு வடசென்னை படத்தில் பணியாற்றியிருக்க வேண்டியது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அது நடந்து வருவது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறார் என்றார்.
வெற்றிமாறன் கூறியதாவது: சூரி நடிக்கும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடித்துள்ளோம். படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும். அந்தக் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிறார்.