மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கடந்த 70 நாட்களாக புதுடில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக மாறியது. முக்கியமாக இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, விவசாயிகள் -போலீஸ் மோதல், டில்லியில் இன்டர்நெட்டை கட் செய்தது போன்ற செய்திகளை முன்வைத்து, நாம் ஏன் இதைப்பற்றி பேசுவதில்லை? என்று டுவிட்டரில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதையடுத்து அவரது டுவீட்டை ஆதரித்து வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து பதிவிட்டவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்சய்குமார், நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை பதிவிட்டனர். இப்போது நடிகை டாப்சியும் தனது எதிர்ப்பு பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டுவீட்டில், ''ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையைத் தூண்டினால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதநம்பிக்கையை குலைக்குமானால், உங்கள் மதிப்பினை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் பிரச்சாரர்களாக மாறக்கூடாது'' என்று பதிவிட்டுள்ளார் டாப்சி.