பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

கடந்த 70 நாட்களாக புதுடில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக மாறியது. முக்கியமாக இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, விவசாயிகள் -போலீஸ் மோதல், டில்லியில் இன்டர்நெட்டை கட் செய்தது போன்ற செய்திகளை முன்வைத்து, நாம் ஏன் இதைப்பற்றி பேசுவதில்லை? என்று டுவிட்டரில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதையடுத்து அவரது டுவீட்டை ஆதரித்து வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து பதிவிட்டவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்சய்குமார், நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை பதிவிட்டனர். இப்போது நடிகை டாப்சியும் தனது எதிர்ப்பு பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டுவீட்டில், ''ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையைத் தூண்டினால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதநம்பிக்கையை குலைக்குமானால், உங்கள் மதிப்பினை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் பிரச்சாரர்களாக மாறக்கூடாது'' என்று பதிவிட்டுள்ளார் டாப்சி.