அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஒரு வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் வழக்கத்திலிருந்து விலகி பல பரிசோதனை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' படத்தில் விஜய்யையே ஓவர்டேக் செய்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் வெளிவந்தன.
விஜய் சேதுபதி அடுத்து நடித்துள்ள தெலுங்குப் படமான 'உப்பெனா' அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இன்று மாலை இப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பாடலான 'நீ கண்ணு நீலி சமுத்திரம்' பாடல் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது- அது முதலே படத்தைப் பற்றிய பேச்சுக்களும் அதிகமானது. டீசர் வெளிவந்த பிறகு அந்த எதிர்பார்ப்பு கூடியது.
தற்போது படத்தின் வியாபாரத்தில் ஏரியாக்களை நல்ல விலை கொடுத்து வாங்க பலர் முன் வந்துள்ளனராம். புச்சி பாபு சனா இயக்கத்தில் சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்ணவ் தேஜ் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சுகுமார் எழுதியிருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக அமைந்துள்ளது.