புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் நவம்பர் 10 முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிப்ரவரி 1 முதல்தான் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குப் பிறகுதான் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், இதுவரையிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கியுள்ளனர்.
கேரளாவில் பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்களில் உள்ள திரையுலகினரும் 100 சதவீத அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
'கேஜிஎப் 2, சலார்' பட இயக்குனராக பிரஷாந்த் நீல் கர்நாடக அரசுக்கு, “சினிமா அநேகம் பேருக்கு என்டர்டெயின்மெட், ஆனால், பலருக்கு அது வாழ்க்கை” என 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அது போலவே மற்ற திரையுலகிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.