பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தாலும் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் விரக்தியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் வேலையிலோ, உங்கள் படிப்பிலோ அல்லது ஒருவரை காதலித்து அவருடன் உறவு கொள்வதிலோ இல்லை என்பது ஒரு நாள் உங்களுக்கு புரியும். நமக்கு முன்னே நடந்து சென்றவர்களின் காலடிகளை பின்தொடர்ந்து செல்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. மற்றவர்களை போல் நாம் நடந்துகொள்வதால் ஒருபோதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படாது. புதிய விஷயங்களை தேடி கண்டறிவதிலும், நம்பிக்கையிலும், நம் மனது சொல்வதை கேட்டு அதன்படி நடந்துகொள்வதிலும் தான் இருக்கிறது. நமக்கு நாம் கருணையாக இருக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது எப்போதும் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை பொருத்தே அமையும். நமது மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை.. அது நாம் நாமாக வாழும் போது தான் கிடைக்கிறது. மகிழ்ச்சி என்பது உங்களை பொருத்தே அமைகிறது", என விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.