அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தாலும் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் விரக்தியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் வேலையிலோ, உங்கள் படிப்பிலோ அல்லது ஒருவரை காதலித்து அவருடன் உறவு கொள்வதிலோ இல்லை என்பது ஒரு நாள் உங்களுக்கு புரியும். நமக்கு முன்னே நடந்து சென்றவர்களின் காலடிகளை பின்தொடர்ந்து செல்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. மற்றவர்களை போல் நாம் நடந்துகொள்வதால் ஒருபோதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படாது. புதிய விஷயங்களை தேடி கண்டறிவதிலும், நம்பிக்கையிலும், நம் மனது சொல்வதை கேட்டு அதன்படி நடந்துகொள்வதிலும் தான் இருக்கிறது. நமக்கு நாம் கருணையாக இருக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது எப்போதும் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை பொருத்தே அமையும். நமது மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை.. அது நாம் நாமாக வாழும் போது தான் கிடைக்கிறது. மகிழ்ச்சி என்பது உங்களை பொருத்தே அமைகிறது", என விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.