'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
ஆந்திராவில் ஐதராபாத் போலீஸில் ஒரு சிறப்பு பிரிவாக, கடந்த ஒரு வருடமாக மகளிர் போலீஸ் குழு ஒன்று இயங்கி வருகிறது.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என தெரிய வந்தால், அடுத்த சில நிமிடங்களில் விரைந்து சென்று அவர்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகின்றனர் இந்த சிறப்பு குழுவில் உள்ள பெண் காவலர்கள். குறிப்பாக இவர்கள் மருத்துவ பயிற்சியும் பெற்றுள்ளனர். அந்தவகையில் கடந்த ஒரு வருடத்தில் பல பெண்களை, பல்வேறு விதமான உயிராபத்து பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீட்டுள்ளனர்,
இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி, இதில் பணியாற்றும் பெண் காவலர்களை கவுரப்படுத்தும் விதமாக நேற்று போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்களை பாராட்டி கவுரவித்தார் நடிகை அனுஷ்கா. இந்த வருடத்தில் அனுஷ்கா கலந்து கொள்ளும் முதல் நிகழ்வும் இதுதான்.. .
இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, “சினிமா நடிகர்களான நாங்கள் நட்சத்திரங்களாக உருவகப்படுத்தப்படுகிறோம்.. ஆனால் காவல்துறையில் உள்ள ஒவ்வொருவருமே நிஜமான நட்சத்திரங்கள் தான். உங்கள் முயற்சி, கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் தான், நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம்.. இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதையும் நிஜ நட்சத்திரங்களை சந்தித்தததையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என கூறியுள்ளார்.