இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆந்திராவில் ஐதராபாத் போலீஸில் ஒரு சிறப்பு பிரிவாக, கடந்த ஒரு வருடமாக மகளிர் போலீஸ் குழு ஒன்று இயங்கி வருகிறது.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என தெரிய வந்தால், அடுத்த சில நிமிடங்களில் விரைந்து சென்று அவர்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகின்றனர் இந்த சிறப்பு குழுவில் உள்ள பெண் காவலர்கள். குறிப்பாக இவர்கள் மருத்துவ பயிற்சியும் பெற்றுள்ளனர். அந்தவகையில் கடந்த ஒரு வருடத்தில் பல பெண்களை, பல்வேறு விதமான உயிராபத்து பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீட்டுள்ளனர்,
இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி, இதில் பணியாற்றும் பெண் காவலர்களை கவுரப்படுத்தும் விதமாக நேற்று போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்களை பாராட்டி கவுரவித்தார் நடிகை அனுஷ்கா. இந்த வருடத்தில் அனுஷ்கா கலந்து கொள்ளும் முதல் நிகழ்வும் இதுதான்.. .
இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, “சினிமா நடிகர்களான நாங்கள் நட்சத்திரங்களாக உருவகப்படுத்தப்படுகிறோம்.. ஆனால் காவல்துறையில் உள்ள ஒவ்வொருவருமே நிஜமான நட்சத்திரங்கள் தான். உங்கள் முயற்சி, கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் தான், நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம்.. இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதையும் நிஜ நட்சத்திரங்களை சந்தித்தததையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என கூறியுள்ளார்.