எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா தமிழ் சினிமாவையே மொத்தமாக புரட்டி போட்டு விட்டது. ஒரு புறம் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது. மற்றொரு பக்கம் பெரிய பட்ஜெட் படங்கள் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், சின்னத்திரைக்கென்று தயாரிக்கப்படும் படங்களும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படம் சின்னத்திரைக்கென்றே தயாரிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை அன்று ஒளிபரப்பானது. தற்போது அதேபோல ஒரு படம் சத்தமின்றி தயாராகி வருகிறது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு ராஜேஷ் எம்.இயக்த்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இவர்கள் தவிர ஆனந்தராஜ், டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தயாரிக்கும் முன்னணி சேனல், ஏப்ரல் 14 அல்லது மே 1 அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.