7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கொரோனா தமிழ் சினிமாவையே மொத்தமாக புரட்டி போட்டு விட்டது. ஒரு புறம் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது. மற்றொரு பக்கம் பெரிய பட்ஜெட் படங்கள் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், சின்னத்திரைக்கென்று தயாரிக்கப்படும் படங்களும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படம் சின்னத்திரைக்கென்றே தயாரிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை அன்று ஒளிபரப்பானது. தற்போது அதேபோல ஒரு படம் சத்தமின்றி தயாராகி வருகிறது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு ராஜேஷ் எம்.இயக்த்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இவர்கள் தவிர ஆனந்தராஜ், டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தயாரிக்கும் முன்னணி சேனல், ஏப்ரல் 14 அல்லது மே 1 அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.