மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இந்தியத் திரையுலகில் ஒரு கன்னடப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது ஒரு வரலாறு தான். அப்படி ஒரு வரலாற்றைப் பெற்ற படமாக 'கேஜிஎப் சேப்டர் 2' படம் இடம் பெற்றுள்ளது.
அப்படத்தின் டீசர் வெளிவந்து தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து இதுவரையில் வெளிவந்த டீசர்களின் சாதனைகளை முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிப் படங்கள் செய்யாத ஒரு சாதனையை கன்னடப் பட டீசர் செய்து இந்தியத் திரையுலகத்தையே வியக்க வைத்துள்ளது.
'கேஜிஎப்' முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்திற்காக தனது சம்பளத்தை புது கணக்கில் ஒப்பந்தம் செய்துள்ளாராம் படத்தின் நாயகன் யாஷ்.
முதல் பாகத்திற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாம். இரண்டாம் பாகத்திற்காக அவருடைய சம்பளம் டபுள் ஆகி 30 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாம். மேலும், படத்தின் லாபத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தையும் பேசியுள்ளாராம்.
இம்மாதிரியான சம்பள விகிதம் ஹிந்திப் பட நடிகர்கள் மட்டுமே போடுவார்கள். அவர்களைப் போலவே தற்போது கன்னட நடிகரான யாஷ் போட்டிருக்கிறார் என சாண்டல்வுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கணக்கின்படி படம் வெளிவந்தால் எப்படியும் யாஷ் சம்பளமாக 100 கோடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.