சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கைய்யா. தற்போது பிரபல காமெடி நடிகரான செந்திலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இந்த படம் குறித்து டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா கூறுகையில், இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் கதையில் உருவாகிறது. மொத்தம் இரண்டு முக்கிய கேரக்டர்கள். அதில் செந்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இன்னொரு நடிகரை இன்னும் முடிவு செய்யவில்லை. இவர்களுடன் சேர்த்து இன்னும் 4 கேரக்டர்கள் இந்த படத்தில் உள்ளன. இந்த ஆறு கேரக்டர்களை சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நடக்கிறது.
அதோடு, இந்த படம் சீரியசான கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. இப்படம் கியூமரான கதைக்களத்தில் உருவாகிறது என்று கூறிய சுரேஷ் சங்கையாவிடத்தில், காமெடி நடிகரான செந்திலை நாயகனாக நடிக்க வைப்பது ஏன்? என்று கேட்டபோது, செந்தில் இந்த படத்தில் ஹீரோ அல்ல. இந்த கதையில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் அவரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அந்த வகையில், செந்திலை இந்த படம் இதுவரை பார்க்காத ஒரு புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். இப்படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சுரேஷ் சங்கைய்யா.