நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கைய்யா. தற்போது பிரபல காமெடி நடிகரான செந்திலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இந்த படம் குறித்து டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா கூறுகையில், இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் கதையில் உருவாகிறது. மொத்தம் இரண்டு முக்கிய கேரக்டர்கள். அதில் செந்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இன்னொரு நடிகரை இன்னும் முடிவு செய்யவில்லை. இவர்களுடன் சேர்த்து இன்னும் 4 கேரக்டர்கள் இந்த படத்தில் உள்ளன. இந்த ஆறு கேரக்டர்களை சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நடக்கிறது.
அதோடு, இந்த படம் சீரியசான கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. இப்படம் கியூமரான கதைக்களத்தில் உருவாகிறது என்று கூறிய சுரேஷ் சங்கையாவிடத்தில், காமெடி நடிகரான செந்திலை நாயகனாக நடிக்க வைப்பது ஏன்? என்று கேட்டபோது, செந்தில் இந்த படத்தில் ஹீரோ அல்ல. இந்த கதையில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் அவரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அந்த வகையில், செந்திலை இந்த படம் இதுவரை பார்க்காத ஒரு புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். இப்படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சுரேஷ் சங்கைய்யா.