விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கைய்யா. தற்போது பிரபல காமெடி நடிகரான செந்திலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இந்த படம் குறித்து டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா கூறுகையில், இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் கதையில் உருவாகிறது. மொத்தம் இரண்டு முக்கிய கேரக்டர்கள். அதில் செந்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இன்னொரு நடிகரை இன்னும் முடிவு செய்யவில்லை. இவர்களுடன் சேர்த்து இன்னும் 4 கேரக்டர்கள் இந்த படத்தில் உள்ளன. இந்த ஆறு கேரக்டர்களை சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நடக்கிறது.
அதோடு, இந்த படம் சீரியசான கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. இப்படம் கியூமரான கதைக்களத்தில் உருவாகிறது என்று கூறிய சுரேஷ் சங்கையாவிடத்தில், காமெடி நடிகரான செந்திலை நாயகனாக நடிக்க வைப்பது ஏன்? என்று கேட்டபோது, செந்தில் இந்த படத்தில் ஹீரோ அல்ல. இந்த கதையில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் அவரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அந்த வகையில், செந்திலை இந்த படம் இதுவரை பார்க்காத ஒரு புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். இப்படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சுரேஷ் சங்கைய்யா.