மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
இந்த சீசனிலும் அதே போல் பிக் பாஸ் குறிப்பிட்ட தொகையை வழங்க இருக்கிறாராம். இம்முறை பிக்பாஸ் கொடுக்கும் தொகையைப் பெற்றுக் கொண்டு ரம்யா பாண்டியன் வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. நாளை அல்லது அதன் மறுநாள் ஒளிபரப்பாகும் எபிசோடில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றைய தினம் பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.