பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். குணசித்திர வேடத்தில் அறிமுகமானாலும் தற்போது வில்லியாகவும், கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஒரு பாட்டுக்கு ஆடியும் வருகிறார். மும்பை மாடலான சஞ்சனாசிங் இப்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி இங்கேயே செட்டிலாகிவிட்டார். கொஞ்சம் நமீதா தமிழும் பேசுகிறார்.
அவரின் மினி பேட்டி:
சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் டான்ஸ் கத்துக்கிட்டேன், தினமும் ஜிம்முக்குபோய் உடம்பை பாதுகாத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தேன். நான் கலந்துக்குற ஷோக்கு நிறைய வரவேற்பு இருக்கும். காரணம் மற்றவர்களைவிட என்னோட நடை கிளாமரா இருக்கும். மாடலிங் துறையில் இருந்தபோது டான்ஸ் மாஸ்டர் ஷோபி எனக்கு பிரண்டானார். அவர் மூலமாத்தான் ரேணிகுண்டா படத்துல வாய்ப்பு கிடைச்சுது. முதல் படத்துலேயே ஹீரோயினா அறிமுகமாகலியேன்னு வருத்தமா இருந்துச்சு. அதைவிட ஒரு பாலியல் தொழிலாளியா நடிச்சது இன்னும் கஷ்டமா இருந்துச்சு. இருந்தாலும் முதல் சான்ஸ்சை விடக்கூடாதுன்னு நடிச்சேன். அதுக்கு பிறகு பாராட்டு கிடைச்ச அளவுக்கு சான்ஸ் கிடைக்கல. காத்திருந்தேன். நான் மும்பை நடிகைகள் மாதிரி இருப்பதால் எல்லோரும் ஒரு பாட்டுக்கு ஆட கூப்பிட்டாங்க. வீட்டுல சும்மா இருக்கிறதுக்கு ஆடலாமேன்னு போனேன். அதுவே நிரந்தரமாயிடுச்சி. இருந்தாலும் சில நேரங்கள்ல நடிக்கிறதுக்கும் சான்ஸ் கிடைக்குது.
தமிழ் சினிமாவுக்கு நான் சொல்லிக்கிறது என்னன்னா? நான் நடிக்கிறதுக்கு வந்திருக்கேன். ப்ளீஸ் என்னை ஆட கூப்பிடாதீங்க. அயிட்டம் கேர்ள்னு சொல்லாதீங்க. நல்ல கேரக்டர் கொடுங்க நடிச்சு பிச்சு உதர்றேன். இப்போ நல்லா தமிழ் பேசவும் கத்துக்கிட்டேன். எத்தனை பக்கம் வசனமா இருந்தாலும் ரெண்டு நாளைக்கு முன்னாடி கொடுங்க அப்படியே மனப்பாடம் பண்ணிட்டு வந்து பேசிக் காட்டுறேன். எனக்கு மெம்மரி பவர் அதிகம். மார்டன் டிரஸ் போட்டத்தான் மும்பை பொண்ணு மாதிரி தெரிவேன். ஆஃப் சாரியோ, புல் சாரியோ கட்டினா அசல் உங்க ஊரு பொண்ணு மாதிரி தெரிவேன். நடிப்புக்கு சவால் விடுற வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சு அசத்துணும்னு ஆசை. என்கிறார்.
சஞ்சனாசிங்க புரிஞ்சிகோங்கோ...