பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சினிமாவில் அவ்வப்போது டாக்டர்கள் வந்து மிரட்டிவிட்டுச் செல்வார்கள். திருச்சியிலிருந்து டாக்டர் ராம் என்பவர் நடிக்க வந்தார். காது மூக்கு தொண்டை சிகிச்சைக்கு இந்திய அளவில் புகழ் பெற்றவர். ஒருசில உப்புமா படங்களில் நடித்தவர் சொந்தமாக பிரம்மதேவா என்ற படத்தை தயாரித்து நடித்தார். அது அட்டர் ஃபிளாப்பாக மீண்டும் டாக்டர் தொழிலுக்கே திரும்பி விட்டார். அடுத்து அக்குபன்ஞ்சர் டாக்டர் சீனிவாசன் கோடிகளோடு புறப்பட்டு வந்தார். நடிப்பு, இயக்கம், கதை, வசனம் என்று ஏகத்துக்கு பயமுறுத்தியதோடு பவர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வைத்துக்கொண்டு சினிமாவில் நிஜ காமெடி பீசாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்போது டாக்டர்.பி.சரவணன் என்பவர் மதுரையிலிருந்து வந்திருக்கிறார். இவர் எம்.டி படித்தவர். மதுரையில் ஏழைகளுக்கு இலசவ மருத்தும் செய்கிறாராம். சரவணா மருத்துவமனை என்ற பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். நிறைய தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறாராம். இவரும் அகிலன் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து அதில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். காரணம் டாக்டர் சரவணன் மதுரை பைனான்சியர் அன்பு செழியனுக்கு நெருங்கிய நண்பராம். அவரின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டுதான் எல்லோரும் வந்ததாக அவர்களே மேடையில் சொன்னார்கள். அதோடு முன்பின் அறிந்திராத டாக்டரைப் பற்றி வானளாவ புகழ்ந்தார்கள். மதுரையிலிருந்து வந்த டாக்டர்களின் ஆதரவாளர்கள், விழாவின் இறுதிவரை அரங்கம் அதிர வாழ்க கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நடிகை நமீதாவும், சோனியா அகர்வாலும் கவர்ச்சியாக வந்து விழாவுக்கு கலர் சேர்த்தார்கள்.
அக்குபன்ஞர் டாக்டருக்கு கோடிக்கணக்கில் பணம் வந்ததது எப்படி?, மதுரை டாக்டர் சமூக சேவகர் என்பது உண்மையால் சினிமா எடுத்திருக்கும் கோடிகளை வைத்து இன்னொரு மருத்துவமனை கட்டியிருக்கலாமே?, இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டரால் கோடிகளை செலவு செய்து எப்படி படம் தயாரிக்க முடிகிறது? இவையெல்லாம் ரசிகனுக்கு பதில் கிடைக்காத கேள்விகள்.