Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீயான் விக்ரமின் சென்டிமென்ட் !

25 செப், 2018 - 10:53 IST
எழுத்தின் அளவு:
vikrams-sentiment

பாலா இயக்குநரான அறிமுகமான சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாலாவை திரும்பிப்பார்க்க வைத்தது. அதோடு, நீண்டகாலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு திருப்புமுனை படமாக அமைந்தது.


அதன்காரணமாகவே தனக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திக்கொடுத்த பாலாவின் இயக்கத்திலேயே தனது மகன் துருவ்வையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்ரம், தற்போது பாலாவின் இயக்கத்தில் வர்மா படத்தில் தனது மகனை நடிக்க வைத்து அவரது மோதிரக்கையினால் குட்டு வாங்க வைத்து விட்டார்.


இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடந்தது. அப்போது வர்மா படத்தில் துருவிடம் பணியாற்றியது பற்றி பாலா கூறுகையில், துருவை சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரியும். எதையும் ரொம்ப உன்னிப்பாக கவனிப்பான். அதனால் அவனிடம் வேலைவாங்குவது கடினமில்லை என்பது எனக்குத் தெரியும். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் முதல் நாளிலேயே எனது கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டான் என்று கூறினார்.


அதையடுத்து விக்ரம், துருவ் இருவரில் யாரிடம் வேலை வாங்குவது எளிதாக இருந்தது என்று தொகுப்பாளினி டைரக்டர் பாலாவிடம் கேட்டபோது, மேடையில் தன்னுடன் நின்று கொண்டிருந்த விக்ரமைப்பார்த்து, விக்ரமை விட துருவிடம் வேலை வாங்குவதுதான் எளிதாக இருந்தது என்று ஜாலியாக சொல்ல, அவரை கட்டித்தழுவிக்கொண்டார் விக்ரம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)