புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து பட்டியலிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறார். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி- பெயரையும் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
அரண்மனை படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்த போது, அதன் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் போன் செய்தார். படப்பிடிப்பில் சுந்தர் சி-யை அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர், ஒளிப்பதிவாளர் செந்தில் குமாரையும் சந்தித்தேன். நிச்சயம் பட வாய்ப்பு தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.
மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வர சொன்னார். பட வாய்ப்பு வேண்டுமென்றால் கணேஷ் மற்றும் சுந்தர் சி உடன் பாலியல் சமரம் செய்து கொள்ள வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும். கணேஷ் ஒரு மோசடிக்காரர், எனக்கு உதவவில்லை என பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை சுந்தர் சி மறுத்துள்ளார். அதோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் வழக்கு தொடர்வேன் என சுந்தர் சி கூறியுள்ளார்.
சென்னை வருகிறார் : இதனிடையே தன்னை ஏமாற்றிய நடிகர்கள் பற்றி புகார் அளிக்க சென்னை வர இருப்பதாக ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார்.