Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகியாக திருநங்கையை தேர்வு செய்தது ஏன்..? ; மம்முட்டி

24 ஜூன், 2018 - 11:00 IST
எழுத்தின் அளவு:
mammooty-on-why-to-select-transgender-as-heroine-for-perambu

தமிழில் இயக்குனர் ராம் டைரக்சனில் பேரன்பு என்கிற படத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றுவரும் இந்தப்படம் கொடைக்கானலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். இந்த அஞ்சலி தவிர இன்னொரு அஞ்சலியும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். முழுப்பெயர் அஞ்சலி அமீர்.. இவர் ஒரு திருநங்கை ஆவார்..

பொதுவாகவே திருநங்கைகளை ஏளனமாகவே பார்க்கும் இந்த ஊரில் இயக்குனர் ராமும் ஒரு திருநங்கைக்கு கதாநாயாகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என மம்முட்டியே கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அங்கே வந்திருந்த அழகான திருநங்கைகள் பலரை மம்முட்டி பார்த்து ஆச்சர்யப்பட்டாராம்.


அவர்கள் எல்லாம் பாலின மாற்று அறுவை சிகிசை செய்துகொண்டவர்கள் என தெரியவந்ததால். பேரன்பு படத்தில் அப்படி ஒரு திருநங்கை கதாபாத்திரம் இருப்பதால், திருநங்கைகளில் ஒருவரான அஞ்சலி அமீரை இயக்குனர் ராமிடம் பரிந்துரை செய்தாராம் மம்முட்டி. இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பது இந்த அஞ்சலி அமீர் தான்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)