அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
மகாநதி படத்திற்கு பிறகு வழக்கமான கதாநாயகி வேடங்களில் நடிப்பதில் ஆர்வத்தை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் கைவசம் சண்டக்கோழி-2, சாமி-2, விஜய்-62 ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்து இன்னும் அவர் புதிய படங்களில் கமிட்டாகவில்லை.
முக்கியமாக, தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்தபோதும், தெலுங்கில் அந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளை பாடல் காட்சிகளில் கிளாமராக நடனமாட மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால்தான், மகாநதிக்குப்பிறகு முன்னணி தெலுங்கு நடிகர்களின் படவாய்ப்புகள் தேடிவந்த போதும் அந்த படங்களை நாசுக்காக தவிர்த்து விட்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேடி வருகிறார்.