பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கதைகளுக்கேற்ப தனது உடலை வருத்தி நடிக்கக் கூடியவர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி விக்ரம் நடித்ததைப்பார்த்து அண்டை மாநில ஹீரோக்களெல்லாம் ஆச்சர்யப்பட்டார்கள்.
ஆனபோதும், அதன்பிறகு விக்ரமின் திறமைக்கு சவால் விடக்கூடிய சரியான கதைகள் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், தற்போது சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வரும் அவர், இதையடுத்து மகாவீர் கர்ணா என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அக்டோபரில் இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அதனால் கர்ணன் என்ற சரித்திர கதாபாத்திற்கேற்ப உடல்கட்டை மாற்றும் முயற்சியில் தற்போது ஈடு பட்டு வரும் விக்ரம், தினமும் ஜிம்மிற்கு சென்று கிட்டத்தட்ட 5மணி நேரத்திற்கும் மேலாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். இந்த படம் அவதார் பாணியில் அதிரடி சரித்திர படமாக உருவாகிறது.