கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் |

ஒரு இரவில் நடக்கும் கதை, ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை என்றெல்லாம் விதவிதமான படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக ஒரே திருவிழாவில் நடக்கும் கதையாக தயாராகி இருக்கிறது பக்கா படம். பேரரசுவின் உதவியாளர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கி இருக்கிறார். வருகிற 27ந் தேதி படம் வெளிவருகிறது. படம் குறித்து இயக்குர் சூர்யா கூறியதாவது:
இந்தப் படத்தின் கதை முழுக்க ஒரு திருவிழாவில் நடக்கிறது. அதனால் படம் முழுக்க வெளிப்புற காட்சிகளாகவே படமாக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு திருவிழாவில் ஒரு பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த பிரச்னை திருவிழா முடிவதற்குள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை.
இதற்குள் காதல், காமெடி, ஆக்ஷ்ன் என எல்லா அம்சங்களும் இருக்கிறது. காமெடி தூக்கலாக இருக்கும். இரண்டு விக்ரம் பிரபு என்பதால் ஒருவருக்கு நிக்கி கல்ராணியும், இன்னொருவருக்கு பிந்து மாதவியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 36 நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். சத்யா இசை அமைத்துள்ளார், சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது விக்ரம் பிரபுவுக்கு முக்கியமான படமாக இருக்கும். எனக்கு என் சினிமா கேரியரை வெற்றியுடன் துவக்கி வைக்கிற படமாக இருக்கும்" என்றார்.