அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
ஜெய் உடனான காதல் முறிவுக்குப் பிறகு அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியுள்ளன. சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடிகள்-2 படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். அந்தப்படம் பாராட்டப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. எனவே மீண்டும் அவரது இயக்கத்தில் 'சேதுபதி' படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.
இந்த இரண்டு படங்களைத்தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அருண் குமார். 'பாகுபலி 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விஜய்சேதுபதி படம் என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் ஏற்கனவே இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.