சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக, புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில், திரைப்படம் துவங்குவதற்கு முன், தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதி மன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கியது தொடர்பாக, சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்குவதற்காக, அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இது தொடர்பாக ஆறு மாதத்துக்குள் புதிய பரிந்துரைகளை அளிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கிய உத்தரவை, கோர்ட் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.