பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உள்ள மெர்சல் படம், ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. மெர்சல் படத்திற்கு ஆதரவுகளும், எதிர்ப்புக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொன்ன விஜய், அட்லிக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மெர்சல் படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை எடுத்துரைத்த விஜய், அட்லிக்கு பாராட்டுக்கள். மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட மிரட்டல். தணிக்கை செய்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே விமர்சி்க்கும் காட்சிகளும், வசனங்களும் இடம்பெறுகின்றன. அது தான் ஜனநாயக சட்டம் வழங்கி உள்ள கருத்து சுதந்திரம்.
ஒரு சில அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் வசனங்கள், காட்சிகள் மட்டும் தான் சினிமாவில் இடம்பெற வேண்டும் என்றால், தணிக்கை குழு எதற்கு? தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என விஷால் தெரிவித்துள்ளார்.