Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்காக திருப்பதியில் டி.ஆர்., சிறப்பு பிரார்த்தனை

10 செப், 2017 - 11:24 IST
எழுத்தின் அளவு:
T.-Rajendar-at-Tirupati-praying-for-Simbu-to-get-married-soon

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். அந்த படத்தை அடுத்து கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே சிம்பு ஒரு ஆங்கில படத்திலும் நடிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும், நயன்தாராவை காதலித்த சிம்பு, பின்னர் ஹன்சிகாவை காதலித்தபோது அது கல்யாணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்துவிட்டது. அதனால் திருமணத்தின் மீதே ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் சிம்பு.


இந்த நிலையில், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று திருப்பதி கோயிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார் அவரது தந்தையான டி.ராஜேந்தர். அதையடுத்து அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது, சிம்புவுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தரிசனம் செய்ய வந்தேன். அவருக்கு பிடித்தமான பெண்ணை அவரே தேர்வு செய்வார். அந்த பெண் கண்டிப்பாக எல்லா ஐஸ்வர்யமும் நிறைந்த பெண்ணாக இருப்பார் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)