மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். அந்த படத்தை அடுத்து கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே சிம்பு ஒரு ஆங்கில படத்திலும் நடிப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், நயன்தாராவை காதலித்த சிம்பு, பின்னர் ஹன்சிகாவை காதலித்தபோது அது கல்யாணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்துவிட்டது. அதனால் திருமணத்தின் மீதே ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் சிம்பு.
இந்த நிலையில், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று திருப்பதி கோயிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார் அவரது தந்தையான டி.ராஜேந்தர். அதையடுத்து அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது, சிம்புவுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தரிசனம் செய்ய வந்தேன். அவருக்கு பிடித்தமான பெண்ணை அவரே தேர்வு செய்வார். அந்த பெண் கண்டிப்பாக எல்லா ஐஸ்வர்யமும் நிறைந்த பெண்ணாக இருப்பார் என்று கூறியுள்ளார்.