அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி மேனன். குறிப்பாக, பூ படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிபார்க்கப்பட்ட அவர், தான் எதிர்பார்த்த மாதிரியான கதைகள் அமையாததால் மீண்டும் மலையாளத்திற்கே சென்று விட்டார்.
இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பார்வதி மேனன். கடந்த ஆண்டு மலையாளத்தில் பகத்பாசில்-அபர்ணா முரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தின் ரிமேக்கில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அந்த லொகேசனில் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
இந்த படத்திலும் பூ படத்தில் நடித்தது போலவே கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார் பார்வதி மேனன். தமிழைப்போலவே மலையாளத்திலும் பல படங்களில் அவர் சவாலான வேடங்களில் நடித்திருப்பதால், இந்த படத்தில் பார்வதி மேனன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறாராம் பிரியதர்ஷன்.