தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா |
கோவையில் இருந்து சென்னை வந்தபோது ஹிப்ஹாப் தமிழா உள்பட சில ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தார் ஆதி. அதிலுள்ள பாடல்களை கேட்டு விட்டு பலரும் வித்தியாசமாக இருப்பதாக அவரிடம் சொன்னார்களாம். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா மட்டும், நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் இசையமைப்பாளராக வருவீர்கள் என்று சொன்னாராம். அப்போதுவரை எதிர்காலத்தில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல்தான் இருந்தாராம் ஆதி.
ஆனால், அதன்பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆல்பத்தை கேட்ட விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்த ஆம்பள படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார். அதையடுத்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2, கவண் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமான அவர், மீசை முறுக்கு என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஆக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா கண்டிப்பாக நீங்கள் இசையமைப்பாளராக வருவீர்கள் என்று சொன்னது போலவே சினிமாவில் இசையமைப்பாளராகி விட்டார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் சொன்னது போலவே நான் இசையமைப்பாளராகி விட்டேன். அப்படி இசையமைப்பாளர் ஆனதினால்தான் தற்போது ஹீரோவாகியிருக்கிறேன். நான் இசையமைப்பாளராகியிருக்கா விட்டால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது. இப்படி சொல்லும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ரெஹானா அக்காள் என் வாழ்வில் மறக்க முடியாத நபராகி விட்டார் என்கிறார்.